Sunday, July 29, 2018

நறுக்கென்று ஒரு கேள்வியை இறைவனிடம் ஒருவன் கேட்டான்....
காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்....., காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!
இது என்ன நியாயம்????
கலகலவென சிரித்தான் இறைவன் 😃😃😃😃
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;
தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;
ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;
எனக்கான இடத்தை,
எனக்கான நேரத்தை,
எனக்கான விழாக்களை,
என்னை வணங்கும் முறையை,
எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!
இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு
என்னையே கேட்பது என்ன நியாயம் என்றான்????
யோசிக்க 🤔🤔🤔🤔. அருமை.
படித்ததில் ரசித்தது

No comments:

Post a Comment